ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை
“கலாசாரமானது ஆதிக்கத்தன்மையுடையதாக இருக்கும்போது, அது வன்முறையானதாக இருப்பது மட்டுமன்றி அனைத்து உறவுகளையும் அதிகாரத்திற்கான போரட்டங்களாகவும் கட்டமைக்கும்”
- பெல் ஹூக்ஸ் The Will to Change: Men, Masculinity, and Love
“நாம் ஆற்றல் மிக்கவர்கள். ஏனெனில் வன்முறையிலிருந்து வெளியேறி தொடர்ந்து வாழ்வதென்பதே நமது ஆற்றலுக்கு சாட்சிதான். இதன் மொத்த சாராம்சமும் முற்றுமுழுதாக நமது ஆற்றலையும் வளர்ச்சியையும் பற்றியது”
- ஓட்ரி லோர்ட் https://www.blackpast.org/african-american-history/1982-audre-lorde-learning-60s/
பெண்ணிய அக்கறையாளர்கள் இணைந்து தயாரித்த கண்டனக் கூட்டறிக்கையை உங்கள் கவனத்திற்கு வைக்கிறோம்.
எழுத்தாளர் நடிகர் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பல பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்ததின் அடிப்படையில், அவர்களுக்கான எங்களின் முழுமையான ஆதரவையும், ஆணதிகார துஷ்பிரயோகத்திற்கான எதிர்ப்பையும் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பேற்று அதற்கமைந்த பெண்கள் கூட்டமைப்பொன்றினை உருவாக்கியுள்ளோம்.
பெண்களின் குரல்கள் எழும்போதெல்லாம் காக்கப்படும் கள்ள மெளனங்கள் நம்மை மேலும் மேலும் பலவீனமாக்குவதை அனுமதிக்க முடியாதென்பதாலும் கலை இலக்கிய அரசியல் வெளிகளுக்குத் துணிந்து செயலாற்ற வரும் பெண்களுக்கும் பால்பல்வகையினருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அதிமுக்கியமான தேவை என்பதாலும் இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கிறோம்.
பாலியல் சுரண்டலானது ஆண் பாலினத்திற்கு வழங்கப்பட்ட சலுகையாக இயல்பாக்கப்பட்டிருப்பதும், வரலாறு நெடுகிலும் வன்முறையை அனுபவிப்பதே பெண் பாலினத்திற்கும், பால்பல்வகைமையினர்களுக்கும் விதிக்கப்பட்ட நியமமாக இருப்பதும் கண்கூடு. இதை வெற்று மெளனத்தால் கடப்பது, ஒடுக்குமுறைகளிலேயே அதிமுதன்மையான நிறுவனமான ஆணாதிக்கத்தின் அடிமைச் சங்கிலிகளை இன்னும் இறுக்கி கொள்வதற்கு சமமானது தான் என்பதால் நாங்கள் அதை உடைத்து நொறுக்குவதில் உறுதியாக இருக்கிறோம்.
எழுதும் ஆண் தன் ஆதிக்கப்பால்நிலை (cis gender) அடையாளத்தை, அது தரும் அதிகாரத்தை, பாலியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக பெண்களைச் சுரண்டுவதற்கும், பெண்களுக்கும், பால்பல்வகைமையினர் (queer) மற்றும் திருநர்களுக்கும் எதிரான வன்முறைகளுக்குப் பயன்படுத்துவதும், அதை அறிவுப்பித்து, கலைமனப்பிறழ்வு, மீறல், கட்டுடைத்தல் என்று முட்டுக் கொடுப்பதும் தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. சுயமரியாதை சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தாங்கள் சார்ந்த குடும்பம் - சாதி- மத அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளைத் தாண்டி அரசியல், கலை, இலக்கியம் என்று அறிவுத் துறைகளைத் தேர்ந்தெடுத்து வரும் பெண்களும் திருநங்கைகளும் அதே சுரண்டலால் பாதிக்கப்படும்போது சமூக ரீதியாக எந்த பாதுகாப்புமற்ற சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். திரும்புவதற்கு இடமில்லாமல் அநாதரவாகின்றார்கள். கனவுகளைக் காவு கொடுத்துவிட்டு தங்கள் கூண்டுகளுக்கே திரும்ப நேர்கின்றனர்.
தமிழில் தேர்ந்த எழுத்தாளர் என்று தன் தொடர்ச்சியான படைப்புகளால் அடையாளம் காணப்படுபவர் ஷோபாசக்தி. பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய, பெண்ணியக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுவராகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டவர். ஆனால் அவர் மேல் பாலியல் சுரண்டல் புகார்களை பல பெண்களும் குயர் சமூகத்தினரும் எழுப்பியுள்ளனர். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களுக்கு பொய் வாக்குறுதிகள் தந்து உறவில் ஈடுபடுத்திவிட்டுப் பின், அதில் இரண்டு பெண்களைத் தற்கொலை முயற்சிக்கு தள்ளுமளவு மனச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வறிக்கை பாதிக்கப்பட்டவர்களின் தீவிர பங்கேற்புடனும், ஷோபாசக்தியால் தங்களுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகத்தின் அனுபவங்களை வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் வெளிப்படுத்திய பல பெண்களுடனும் ‘குயர்’ சமூகத்தினருடனும் இடம்பெற்ற தொடர்ச்சியான உரையாடல்களின் விளைவாகவும் உருவாக்கப்பட்டதாகும்.
ஷோபாசக்தியால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான இந்த உரையாடல்களில் வெளிப்பட்ட துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலின் வடிவங்கள்/போக்குகள்:
- ஷோபாசக்தி தன்னையொத்த கண்ணோட்டம் கொண்ட பெண்களைச் (பெண்ணிலைவாதிகள், மார்க்சியவாதிகள், சாதி மறுப்பாளர்கள், ‘குயர்’ சமூக கூட்டாளிகள்) சுரண்ட தனது அரசியல், கலை சார்ந்த பார்வைகளை பயன்படுத்துகின்றமை.
- ஷோபாசக்தி பொதுவெளியில் அறியப்பட்ட பெண்ணிலைவாதிகள், கலைஞர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுடனான தனது தொடர்புகள் மற்றும்/அல்லது உறவுகளைப் பயன்படுத்தி தனது துஷ்பிரயோக மற்றும் சுரண்டல் நடத்தைகள் குறித்த சந்தேகங்கள் எழாதவாறான சூழலை உருவாக்குகின்றமை.
- ஷோபாசக்தி தான் அகதியாக இருந்த வரலாற்றையும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்த அடையாளத்தையும், தன்மீது அனுதாபத்தினை ஏற்படுத்துவதற்கும், அதன்மூலம் பெண்களை ஏமாற்றித் தன்வசப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றமை.
- ஷோபாசக்தி சர்வதேச தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி, குடியுரிமை தொடர்பான சட்டச்சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் ‘குயர்’ சமூகத்தினருக்கு புகலிடக் கோரிக்கைகள்/குடியுரிமைகள் விடயத்தில் உதவுவதாக நம்பிக்கை ஏற்படுத்தியதோடு தனது அந்தஸ்தையும் அனுபவங்களையும் பயன்படுத்தி நீண்டகால வதிவுரிமைப் பாதுகாப்பிற்கான பொய் நம்பிக்கைகளை விதைத்தமை.
- ஷோபாசக்தி தன்மீது உணர்வு ரீதியாக நெருக்கமாகி, சார்ந்திருக்க வேண்டிய நிலையை (co-dependency) உந்துகிற வகையில் தனது வயதையும், உடல் நலம் சார்ந்த பராமரிப்புக்கான தேவையையும் கூறி பெண்களிடம் கழிவிரக்கம் தேடுகின்றமை.
- ஷோபாசக்தி திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, உணர்வுரீதியாகவும் உடல்ரீதியாகவும் நெருங்கி வாழத் தொடங்கியப் பெண்களிடம் ஆரம்பக்கட்டத்தில் அளவுக்கதிகமாக அன்பை கொட்டுவதைப்(love bombing) போல காட்டி அவ்வப்போது தனிமைப்படுத்திப் பின் ஒரேயடியாக புறக்கணித்து அவர்களை முற்றிலும் பலவீனப்படுத்திப் பயன்படுத்திக்கொண்டமை.
- ஷோபாசக்தி அவரை விட்டு விலக முடிவெடுக்கும் பெண்களுக்கு அமையும் வேறு உறவுகளைக் குழப்பும் வகையில், அவர்களின் வாழ்வை அத்துமீறிப் பின்தொடர்வதோடு (stalking) அவர்கள் மீதான தனது 'உடைமை உணர்வையும்’(territorializing) தக்கவைத்துக் கொள்கின்றமை.
- ஷோபாசக்தி தனது அரசியல், இலக்கிய சகபாடிகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ‘குயர்’ சமூகத்தினரின் பாடுகளையும் அனுபவங்களையும் கீழ்மைப்படுத்தி, 'கலைஞனின் பிறழ்வு இயல்பானது' எனக் கற்பிதங்களைப் பரப்பி தனது வக்கிரங்களை நியாயப்படுத்துகின்றமை.
- ஷோபாசக்தி தனது விசுவாசமிக்க ஆதரவாளர்களைக்கொண்டு பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் ஏளனப்படுத்தியும் அச்சுறுத்தியும் மலினப்படுத்தியும் வாயடைக்கச் செய்கின்றமை. இதன்மூலம் பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களின் சுயத்தை உடைத்து அவர்களை கழிவிரக்கத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகின்றமை.
- ஷோபாசக்தி ஒரே சமயத்தில், பல்வேறு நாடுகளில், நகரங்களில் பல பெண்களிடம் அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக, நிலைத்த துணைக்கான - நீடித்த பந்தத்துக்கான உத்தரவாதத்தைப் பொய்யாக அளித்து, உறவு வைத்துக் கொண்டு ஏமாற்றி பித்தலாட்டம் செய்து வஞ்சித்தமை.
பாதிப்புக்குட்படுத்தப்பட்டவர்களால் வெளிப்படுத்தப்பட்ட அனுபவங்கள்:
பாலியல் சுரண்டல் இடம்பெறும் வகையில் சூழலை உருவாக்குவது: ஷோபாசக்தி பாலியல் ரீதியாக சுரண்டிய பெண்களில் பெரும்பாலானோர், அவருக்கு எப்போதும் நற்சான்றிதழ் தரும் அறிவுஜீவிகள் மற்றும் கலைஞர்கள் நிறைந்த சபைகளிலும் இடங்களிலும் தான் அவரை சந்தித்ததாகவும், அவர்கள் அவரிடம் காட்டும் அதே மரியாதையுடனும் அக்கறையுடனும் தம்மையும் நடத்துவார்கள் என்று நம்பியதாகவும் தங்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர். அவரோடான உறவை ஊக்குவித்த மேன்மக்களை அணுகி உறவில் நடக்கும் முறைகேடுகளை பேச முற்பட்ட போதெல்லாம், ஷோபாசக்தி போரினால் பாதிக்கப்பட்டவர் - அகதி, பல கஷ்டங்களை அனுபவித்தவர் என அவர்மீது அனுதாபம் கொள்ளும்வகையில் பேசியதுடன், கலைஞனின் அதீதம் புரிந்துகொள்ளப்படவேண்டியது என வாதாடியதன் மூலமும் மெளனிக்கப்பட்டிருக்கிறார்கள். அவருடைய வெறித்தனமான நடத்தை (obsession) தொடர்பில் பெண்கள் சந்தேகப்பட்டு அவரின் சகாக்களிடம் பேசுகையில், எழுத்தாளனதும் கலைஞனதும் பிறழ்வுகள், அதீதப் போக்குகள் இயற்கையானவை என அப்பெண்களிடம் சொல்லப்பட்டு இவரின் துஷ்பிரயோக நடத்தைகள் நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதன்மூலமாக அந்த உறவினை அவராக முறித்துக்கொள்ளும்வரை, சுரண்டல் என்று உணர்ந்தும் அப்பெண்கள் அந்த உறவில் தொடர்ந்து நிலைத்திருப்பதனை அவரின் கூட்டாளிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
எழுதிவைக்கப்பட்டது போலவே ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளை ஒரேமாதிரி ‘திடீரென’ முறித்துக்கொள்ளும் போது, தனது ‘ஆளுமையாலும், புகழாலும், மேதைமையாலும்’ ஈர்க்கப்பட்டு அப்பெண்கள், திருமணம் குடும்பம் எனக்கேட்டு தன்னை ‘நிறுவனமயப்படுத்த’(institutionalise) முற்படுவதாக பொய்சொல்லி, ஷோபாசக்தி தன் சுரண்டலை ஒவ்வொரு தடவையும் நியாயப்படுத்தியிருக்கிறார்.
கட்டுப்படுத்துவதும்(Controlling) தன்னுடைமை(Ownership) என அதீத உரிமை எடுப்பதும்: பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களின் அனுபவங்களின்படி ஷோபாசக்தி தன்னுடன் உறவிலிருந்த பெண்கள்மீது அதீத உடமையுணர்வை (possessive) வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அவருடன் நீண்டகால உறவிலிருந்த ஒரு பெண்ணிடம், அவர் கழிவறை போகும் போதுகூட ‘என்னை விட்டுவிட்டு அப்படியே வெளியே போய்விடுவாயா?’ என்று கேட்டு அழும் அளவிற்கு வெறித்தனமான (obsessive) ஒட்டுதலுடன் இருந்திருக்கிறார். தன்னுடன் உறவிலிருந்த பெண்கள் தங்களது வாழ்க்கையில் கவனம் செலுத்துகையில் குறிப்பாக அவர்கள் மற்றுமொரு உறவிற்குச் செல்லுகையில், ஷோபாசக்தி திடீரென அறிவிக்காமல் அவர்களது வீடுகளுக்குச் செல்லுதல், பொதுவெளிகளில் எதிர்பாராவிதத்தில் சந்திக்கும் இடங்களில்கூட அப்பெண்களின் துணைவர்களுக்கு சந்தேகம்வரச் செய்வதனை நோக்கமாக கொண்டு, அவருடனான உறவு இன்னும் முடியவில்லை என்பதுபோல நிரூபிக்க முயற்சித்தல் ஆகிய நடத்தைகளைக் கொண்டிருந்திருக்கிறார். இதன் காரணமாக இவருடன் உறவிலிருந்த பெண்களை உறவிற்குப் பின்னரும் ஏதோ ஒருவிதத்தில் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் எப்போதாவது வாய்ப்புக்கிடைக்கும்போது பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதற்கு ஏதுவான சூழலினைப் பேணியிருந்திருக்கிறார்.
அனுதாபத்தை ஏற்படுத்தி நச்சு சார்புநிலையை உருவாக்குதல்:
ஷோபாசக்தி அளவுக்கு மீறிய சுயஅபிமானக் (narcissist) கூறுகள் நிறைந்த நடத்தைகளை அவருடன் பழகிய பெண்கள் எல்லோரோடும் வெளிப்படுத்தியிருக்கிறார். உறவுகளின் ஆரம்பத்திலிருந்தே அளவுக்கதிகமாக அப்பெண்களை நேசிப்பதாக நடிப்பதில் தொடங்கி, பிறக்காத கற்பனைப் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது வரை எதிர்காலத்திற்கான பொய்யான உத்தரவாதத்தினை வழங்கி நம்பிக்கையைக் கட்டியெழுப்பி திட்டமிட்டு பாலியல் சுரண்டலை நடத்தியிருக்கிறார். ஐரோப்பாவில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக வாக்குத்தந்து குயர் உறவுகளைப் பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார். உறவிலிருக்கும் பெண்கள்மீது இவர் வைத்திருந்த கட்டுப்பாடு (control); மிகையான அன்பைக் கொட்டுவது(love bombing); அதன்பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பெண்களை கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம் (neglect) தன்னை நினைத்து ஏங்கச் செய்வது; இவ்வாறான ஒரு வன் (abusive) உறவு ஏற்படுத்தும் பதட்டங்களை உருவாக்கி, அப் பெண்களைவிட்டு இவர் விலகும்போது, இலகுவில் அவரைவிட்டு விலகமுடியாத நிலையினையும், அதன் காரணமாக ஆழ்ந்த மனச்சிதைவையும் ஏற்படுத்தியிருந்திருக்கிறார். தான் கடந்த காலத்தில் அகதியாக இருந்த கதைகளை சொல்லியும் தன் நோய்களைச் சுட்டியும், தன்னைப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லை என்று பச்சாதாபத்தை ஏற்படுத்தியும், தான் செத்தால் கொள்ளி போட வேண்டும் என்று கேட்டும், தன் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தி, உணர்வுகளைச் சுரண்டி, ஒரு நச்சான சார்பு நிலையை உறவுகளில் உருவாக்கியிருக்கிறார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்ணொருவர் கூறுகையில் ஷோபாசக்தி குடிக்கு அடிமையாக இருப்பதுடன் தன்னையும் அப்பழக்கத்திற்கு ஆளாக்கிவிட முனைந்தார் என்பதாலேயே அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டதைக் குறிப்பிட்டார். ஆக இவருடன் உறவில் இருந்த பெண்களோ, குயர் சமூகத்தினரோ இவர் பரப்பிய பொய்யான பிம்பத்தைப் போன்று இவரின் ஆளுமைமீது மோகம் கொண்டு இணைந்து வாழ விரும்பியிருக்கவில்லை. மாறாக இவர் அவர்கள்மீது காட்டிய வெறித்தனமான பிடித்தம், எதிர்காலம் குறித்து ஷோபாசக்தி ஏற்படுத்திய நம்பிக்கை, முற்போக்கு சித்தாந்தங்களைப் பேசி உருவாக்கிய பாதுகாப்புணர்வு என்பவற்றின் காரணமாகவே அவர்மீது ஆழமான நேசத்தினை வளர்த்திருந்தனர்.
விளிம்புநிலை திருநங்கைகளை சுரண்டுதல்: ஷோபாசக்தி வெளிநாட்டில் பால்நிலைசார் அகதியாக புகலிடம் பெற்றுத் தருவதாக கூறி திருநங்கை செயற்பாட்டாளரை பாலியல் ரீதியாக சுரண்டியதோடு மட்டுமல்லாமல், தான் திரைக்கதை எழுதி நடித்த ரூபாவிலும்(Roobha) அந்த உறவில் நடந்தவற்றையெல்லாம் பயன்படுத்தி காட்சிகளாக்கியுள்ளார். பாதிப்புக்குட்படுத்தப்பட்ட அத்திருநங்கை, “ரூபா” திரைப்படத்தைப் பார்த்தபோது தனக்கேற்பட்ட உணர்வுகள் தொடர்பில் கூறுகையில், அந்தப் படத்தில் வெளிப்பட்ட திருநங்கை வெறுப்பே (transphobia) திருநர்கள் தொடர்பில் ஷோபாசக்தி யின் உண்மையான நிலைப்பாடு எனவும், தன்னை அவர் மற்ற ஆண்களைப் போல மனிதத்தன்மையற்ற முறையில் தனது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவே பயன்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். பொதுச் சமூகத்தில் திருநங்கைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது இயல்பானதாயிருக்கின்றதாயினும் திருநர் கூட்டாளியாக (trans ally) தன்னைக் காட்டிக்கொண்ட இவரிடம் அத்தகைய கீழ்மையான செயலைத் தான் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் கூறி வருந்தினார்.
பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் இழிவுபடுத்துதல்: ஷோபாசக்தி தான் உறவிலிருந்த பெண்களுடன் உறவினை எதேச்சதிகாரமாக முறித்துக்கொண்டது தொடர்பில் பிறர் வினவும்போது அப்பெண்கள் தன் மீது உடைமை உணர்வுடன் (possessive) இருப்பதாகவும், சில பெண்கள் தனது அம்மா மற்றும் தங்கையுடன் பேசுவதைக்கூட விரும்புவதில்லை எனும் அளவிற்கு தன்னை சொந்தம் கொண்டாடுவதாகவும், உறவென்றான பிறகு தன்னைத் திருமணம் செய்ய அவர்கள் வற்புறுத்துவதாகவும் கூறி அதனாலேயே தான் அந்த உறவினை முறித்துக்கொண்டதாக சாட்டு சொல்லி நியாயப்படுத்தி வந்த ஷோபாசக்தி, தனது ஆளுமையினைக் கேடயமாக்கி தன்னைத்தானே தொடர்ந்து பாதுகாத்தும் வந்திருக்கிறார். மற்ற இளைய எழுத்தாளர்கள் மீது பாலியல் புகார்கள் வைக்கப்பட்டபோதும், ஷோபாசக்தி தன் இலக்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு அரண்கொடுக்கும் நடவடிக்கைகளை திட்டமிட்டவகையில் மேற்கொண்டுவந்திருக்கின்றார். அவர்களோடு இணைந்து பாலியல் சுரண்டலாளர்களை ஆராதிக்கும் ஒரு கலைக்குழுவை உருவாக்குவது போன்ற செயல்பாடுகள், தன் அழுக்கை மறைத்துக் கொள்வதற்கான பிரயத்தனங்கள் என்றே புரிந்துக்கொள்ள முடிகிறது.
மிரட்டுதலும் மெளனிக்கச்செய்வதும்: ஷோபாசக்தி அவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக பேசுபவர்களிடம், நீங்கள் என்ன கலாசார காவலர்களா (cultural Policing) என்று கேட்டதுடன் அவருடைய சக அறிவுஜீவி கூட்டாளிகளை விட்டு அதையொட்டி கட்டுரை எழுத வைப்பது, அறிக்கை விடச் செய்வது என்று தனது செல்வாக்கை ஊடகமாக்கி, பாதிப்புக்குட்பபடுத்தப்பட்ட பெண்களையும் அவர்களுக்காக பேச வந்தவர்களையும் பிற்போக்காளர்களாக அடையாளப்படுத்தி குணக்கொலை (character assassination) செய்திருக்கிறார். இந்தியாவிலும், கனடாவிலும் ஐரோப்பாவிலும் பல பெண்களையும் ‘குயர்’ சமூகத்தினரையும் தனது ஒரே பாணியிலான மூளைச் சலவைக் கதைகளினூடாகச் சுரண்டி அதில் இரண்டு பெண்களைத் தற்கொலைக்கு தள்ளுமளவு மனச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். தற்கொலை முயற்சியினை மேற்கொண்ட பெண்களையும் ஷோபாசக்தி யும் அவரது குழாமும் விட்டுவைக்கவில்லை. “ஆளுமை இருக்கும் பெண்கள் இந்த அனுபவத்திலிருந்து மீண்டு இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தமது வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள், ஆளுமை குறைந்த அல்லது ஆளுமையற்ற பெண்களே இதுதொடர்பில் சதா புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தற்கொலை முயற்சி செய்கிறார்கள்” என அப்பெண்களை அவர்கள் குற்றம் சுமத்துவதானது (victim blaming) பாதிக்கப்பட்டவர்களை மனிதத்தன்மை நீக்கம் செய்வதல்லாமல் (dehumanising) வேறேது? பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்கள், பாதிக்கப்பட்டவர்களாக உணரக்கூடாது் - அவ்வாறு உணர்வது இழிவானது, பாதிக்கப்பட்டாலும் அதை சத்தம் போடாமல் கடந்து போவது தான் ‘பின் நவீன சிந்தனை’ எனப் பேசி, ஷோபாசக்தி யின் ‘எழுத்துலக, கலையுலக, அரசியிலுலக’ சகாக்கள், பாலியல் சுரண்டலினை சாதாரணமயப்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதுதவிர அன்பு செய்த அளவிற்கு ஏமாற்றத்தையும் துரோகத்தையும் ஒரு மனவடுவாக உணர்வதும் அதைத் தாங்கிக்கொள்ளமுடியாதளவிற்கு மனச்சிதைவினை ஏற்படுத்தியவனை விட்டுவிட்டு தற்கொலை முயற்சி செய்யும் பெண்களைக்கூட குற்றஞ்சுமத்தி, ஆளுமையான பெண்கள் இவ்வாறான சுரண்டல்களைக் கடந்துபோய்விடுவார்கள் என்பதாகப்பேசி நேர்மறையான தீர்ப்பு (positive judgement) மூலமாக அவர்களின் குரலை ஒடுக்கியிருக்கிறார்கள்.
ஆண் கலைஞர்களது பிறழ்வுகள் எத்தகையதாயினும் மனநோயாகவோ அல்லது மன அழுத்தமாகவோ கருதப்படுவது பால்நிலை பாரபட்சமும் இரட்டை நிலைப்பாடுமல்லாது வேறேது? இருபதிற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒரே நாடகத்தை மீண்டும் மீண்டும் ஆடி பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கான அனுமதியை(license) 'எழுத்தாளர்', 'கலைஞர்' என்ற பெயரில் ஆண்களுக்கு வழங்குவதை எந்த சித்தாந்தம் வழிமொழிகிறது? ஆக பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதுடன் அதிலிருந்து தமக்குத்தாமே தண்டனை விலக்கும் பொறுப்புக் கூறலிலிருந்து விலக்கும் பெற்றுக் கொள்வதற்காக, பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஷோபாசக்தி போன்றோராலும் அவர்களது குழாமினாலும் உருவாக்கப்பட்டு பரவவிடப்பட்ட கருத்தியல் கட்டுக்கதையே கலைஞர்களின் ‘பிறழ்'வாகும்.
பொதுவாக பாலியல் சுரண்டல்காரர்களின் உத்திகளில் பல பொதுவான போக்குகளை அவதானிக்க முடியும். அவை ஒரேமாதிரியானவை. அதிலொன்றுதான் பெண்களையும் திருநங்கைகளையும் பாலியல் பண்டங்களாக நடத்தும் போக்கு. தன்னைவிட இளவயது பெண்களிடம் உறவிலிருக்கும் போது, அதையும் பெருமையாக, 'I am having a young lover' எனப் பெருமை பாடியும், அவர் குடிக்குமிடங்களில் தன்னோடு உறவிலிருந்து பெண்களைப் பற்றி பிதற்றியும் தனது ஈகோவிற்கும் ஆணாதிக்கச் சிந்தனைக்கும் தீனியளித்து வந்த ஷோபாசக்தி சமூகத்தில் தன்னை முற்போக்கானவராகவும், அநீதிக்கெதிரான ஒடுக்குமுறைக்கான குரலாகவும் காட்டிக் கொண்டாலும், அவர் பார்வையில் பெண்கள் வெறும் பாலியல் பண்டங்களே!
இந்தப் புகார்களுக்கெல்லாம் ஆதாரம் என்ன, அந்தப் பெண்கள் ஏன் அப்போதே பேசவில்லை, ஏன் போலீஸுக்குப் போகவில்லை, ஏன் தற்காப்பு கலைகள் பயிலவில்லை, அவர்களும் மனம் ஒத்து தானே அவரிடம் பழகினார்கள், என்று கேட்பதற்கான எந்த அருகதையும், பேசத்துணியும் பெண்களையெல்லாம் வார்த்தைகளாலும் பார்வைகளாலும், தங்கள் தீர்ப்புகளாலும் வன்முறை செய்யக் காத்திருப்பவர்களுக்கு இல்லை என்பதையும், ஆண்மைய சமூகத்தில் நிலவும் அதிகார ஏற்றத்தாழ்களில் ஒப்புதல்(consent) எப்படி திரிவுபடுத்தப்படுகின்றது என்ற புரிதல் இல்லாதது போல பாசாங்கு செய்பவர்கள் சுரண்டலுக்குப் பல்லக்கு தூக்குகிறவர்கள் என்பதையும் இங்கு நினைவுறுத்துகிறோம். இந்தச் சமுகம் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்கள் பேசுவதை மதிக்கக்கூடிய, நம்பக்கூடிய மன உயரங்களை அடையும்போது இந்த அறிக்கைகள் எழுதும் பொறுப்பிலிருந்தும் எம்மை நாம் விடுவித்துக்கொள்வோம்.
சமூக அழுத்தங்களையும் மீறி குரலெழுப்பிய பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களைக் கேட்டறிந்த பின்னும், அதற்கான எந்தவொரு பொறுப்புக் கூறலையும் கோராத அதேவேளை, ஷோபாசக்திக்கும் அவரது பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளை முன்னுதாரணமாகக் கொண்டு அவரைப் பின்பற்றும் இளம் எழுத்தாளர்களுக்கும் தளங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு விருதுகளையும் அங்கீகாரத்தினையும் வழங்கிய ‘முற்போக்கு' இயக்கங்கள், காந்தியவாதிகள், பதிப்பாளர்கள், அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஷோபாசக்தி, பல பெண்களையும் குயர் மக்களையும் உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும், மோசமாகப் பாதிப்படையச் செய்த தனது நடத்தைகளுக்குப் பொறுப்புக்கூறுவதுடன், இனி இத்தகைய நடத்தைகளில் ஈடுபடுவதை அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஷோபாசக்தி, தான் எதிர்காலத்தில் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடமாட்டார் என்பதை தன்னுடன் தொடர்புள்ள கலை இலக்கியச் சமூகத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும் .
ஷோபாசக்தியைப் பொறுப்புக்கூறச் செய்வதற்குப் பதிலாக, அவரது முறையற்ற நடத்தையினைச் சாத்தியப்படுத்திய அவரது அனைத்து நட்புசக்திகளிடமும் தமது செயற்பாடுகள் குறித்துச் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம்.
ஷோபாசக்தியுடன் இயங்கும் அனைத்து அமைப்புக்களையும், தெரிந்தும் தெரியாமலும் அவரது இத்தகைய செயற்பாடுகளுக்கு உடந்தையாயிருந்தமைக்காக பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஷோபாசக்தியால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களையும் குயர் சமூகத்தினரையும் கருத்தில் கொள்ளாத அமைப்புக்களிடமும் நபர்களிடமும் (கலைஞர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள்) இப்பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரை நீண்டகாலமாக நச்சுச் சூழலில் நீடிக்கச் செய்தமை தொடர்பிலும், அதன் விளைவாக அவர்கள் பங்களிப்புச் செய்து கொண்டிருந்த துறைக்கும், இயக்கங்களுக்கும் ஏற்படுத்திய தீங்கு தொடர்பிலும் சிந்திக்குமாறு வலியுறுத்துகிறோம்.
அநீதியின் மீதான மெளனமும், பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்குரல்வளைகளின் மீது அலட்சியமாக நடந்து செல்லும் போக்கும் சுரண்டலுக்கும் வன்முறைக்கும் துணை நிற்கும் அநீதியான சூழலில், எதிர்ப்பு ஒன்று தான் மனிதத்தின் மனசாட்சியாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிக்கை அதன் எதிரொலி.
In Solidarity
- Ambai (Writer/Mumbai, India)
- Ajitha K (Feminist Activist, President - Anweshi/Kozhikode, Kerala)
- Ajitha (Youth Leader/Vallamai, Jaffna, Sri Lanka)
- Amala (Advocate/Delhi, India)
- Anandhi Suresh (Feminist Activist, Switzerland)
- Ananya ( Researcher and Artist/Delhi, India)
- Angel Queentus (LGBTQ+ Activist/Sri Lanka)
- Anjana (Feminist Activist/Britain)
- Anitha Vinayagam (Women and Queer Rights Activist and Entrepreneur/Chennai, India)
- Ardra Sivan V (Member - Dravidian Political Society/Trivandrum/India)
- Arpita Banerjee (Performing Artist and Writer/Mumbai)
- Asha Achi Joseph (Film Director - Women in Cinema Collective/Kerala, India)
- Asha Latha (Poet and Translator/Kerala, India)
- Barathy Sivaraja (Marxist Feminist/Britain)
- Bina Paul (Film Editor - Women in Cinema Collective/Kerala, India)
- Bisliya Bhutto (Social Activist/Puttalam, Sri Lanka)
- Chandra Nalliah (Feminist Activist/Canada)
- Chinmayi Sriprada (Singer, Voice Actor and Entrepreneur/India)
- Dhamayanthi (Writer and Filmmaker/ Chennai, India)
- J Devika (Feminist Scholar and Writer/Kerala, India)
- Deedi Damodaran (Screenwriter-Women in Cinema Collective/Kerala, India)
- Deepalakshmi (Techie-Writer-Feminist/Chennai, India)
- Dhivya Marunthaiah (Political Activist/India)
- Divya Bharathi (Independent Filmmaker and Advocate/Madurai, India)
- Divya Gopinath (Actor-Women in Cinema Collective/Kerala, India)
- Gargi Harithakam (Queer Feminist Activist - Vanaja Collective/ Kerala, India)
- Glady Angel (Theatre Artist/Canada)
- Geetha Narayanan (Development Consultant and Researcher/Chennai, India)
- Harikeerthana (Feminist Activist/Australia)
- Hemalatha (Feminist Activist/Vallamai, Jaffna, Sri Lanka)
- Iris Koala (Poet and Translator/Kerala, India)
- Ithayarani (Feminist Activist/Vizhuthu,Trinco, Sri Lanka)
- Jamal Hairunnisha (National Co-ordinator, Shakthi Abhiyan/Chennai, India)
- Jothilakshmi (Advocate/Chennai, India)
- Juwairiya Mohideen (Feminist Activist/Puttalam, Sri Lanka)
- Kaitlin Emmanuel (Writer and Researcher/Toronto, Canada)
- Kala Sriranjan (Writer/London, Britain)
- Kalpradah (Filmmaker-Lyricist-Screenwriter/Chennai, India)
- Kamaleshwary L(Activist/Colombo, Sri Lanka)
- Kanthimathi (Advocate and Social worker/Chennai, India)
- Kavitha Krishnan (Feminist Activist and Writer/Delhi, India)
- Kavitha Muralidharan (Journalist/Chennai, India)
- Kounthini R (Feminist Activist-Vallamai/Jaffna, Sri Lanka)
- Kutti Revathi(Poet, Filmmaker/Chennai, India)
- Lareena Abdul Haq (Senior Lecturer-University of Sri Lanka/ Belihuloya, Sri Lanka)
- Leena Manimekalai (Poet and Filmmaker/India, Canada)
- Leena Yadav (Filmmaker/Mumbai, India)
- Leeny Elango (Poet, Researcher and Activist/Chennai, India)
- Luxmy Sivasamboo (Feminist Activist, France)
- Dr. Marie Drath (Literary Scholar and Activist/Switzerland)
- Malathi Maithri (Poet, Publisher-Anangu/Pondicherry, India)
- Meera Sanghamitra (Activist, All India Feminist Alliance, India)
- Mekha Rajan (Actor - Film and Theatre/Chennai/India)
- Mohana Dharshini (Political Activist/Sri Lanka)
- Moumita Alam (Poet and Essayist/West Bengal, India)
- Nalini Ratnarajah (Women’s Human Rights Defender/ Batticaloa, Sri Lanka)
- Nedra Rodrigo (Writer - Translator - Activist/Canada)
- Negha (Actor and Activist/Chennai, India)
- Neeruja (Feminist Activist - Thozhamai V/Jaffna, Sri Lanka)
- Nithika S (Political Activist - Semmugam/Jaffna, Sri Lanka)
- Nishtha Jain (Independent Filmmaker/Mumbai, India)
- Nivedita Louis (Co-Founder - Her Stories/Chennai, India)
- Nivetha Krishnan (Feminist, Entrepreneur/Chennai, India)
- Niventhini S (Feminist Activist - Vallamai/Jaffna, Sri Lanka)
- Niyanthini Kadirgramar (PhD Candidate/USA)
- Padma Prabha (Feminist Activist/Davos, Switzerland)
- Ponni A (Independent Feminist Historian/Sri Lanka)
- Ponni Brinda (Feminist Researcher Consultant/India)
- Poorani (Co-Founder - Penn Collective/Chennai, India)
- Pranjali (Researcher/Delhi, India)
- Pritha Mahanti (Independent Writer and Editor/West Bengal, India)
- Priya Kanniah (Activist, Entrepreneur/Chennai, India)
- Priya Tharmaseelan (Photographer/Canada)
- Priyatharshini Vincentperis (Independent Journalist/Canada)
- Ramya Sampathkumar (Member-Dravidian Political Society/Bangalore/India)
- Ratneswari (Feminist Activist-Aanaikkottai Women’s Organisation/Sri Lanka)
- Rachel Walter (Political Activist/India)
- Rajany Rajeshwary (Consultant -Thozhamai V/Jaffna, Sri Lanka)
- Ranjani Krishnankumar (Writer and Entrepreneur/Chennai, India)
- Revathy (Film Director and Actor - Women in Cinema Collective/India)
- Rima Kallingal (Film Producer and Actor - Women in Cinema Collective/Kerala, India)
- Sabaritha (Social Worker/Chennai, India)
- Sathiya R (Student/Trinco, Sri Lanka)
- Selvi ( Co-ordinator - Manithi/ Chennai, India)
- Shabnam Hashmi (Social Activist, Founder - ANHAD/New Delhi, India)
- Shamini V (Feminist Activist, Thozhamai V/Jaffna, Sri Lanka)
- Sharmila Sagara (Professor - Anant National University/Gujarat, India)
- Sheeva Dubey (National Alliance For People’s Movements/Pune, India)
- Shobhitha Krishnamoorthy (Writer/Chennai, India)
- Shreen Abdul Saroor (Co-Founder, Women’s Action Network/Sri Lanka)
- Shydhah Zara Nizamudeen (Human Rights Activists/Mount Lavinia, Sri Lanka)
- Siva Malathy (Feminist Activist/Sri Lanka)
- Sreejaya Radhakrishnan (Screenwriter/Mumbai, India)
- Subanya Sivajothy (Writer and Librarian/Toronto, Canada)
- Subhathra Devi ( Vice President - Rajiv Gandhi Panjayati Raj Sangathan/Chennai, India)
- Sutha Selvarajah (HIV Peer Educator/Vavuniya, Sri Lanka)
- Sumathy Karupy (Writer & Filmmaker/Toronto, Canada)
- Suganthi (Feminist Activist, Vallamai/Sri Lanka)
- Dr. Tadchaigeni Panchalingam (Health Educator/USA)
- Tamil Arts Collective, Canada
- Tamil Feminist Collective, Canada
- Tamilini (Artist/Canada)
- Tangella Madhavi (Independent Filmmaker/Kolkata, India)
- Tharmika (Lawyer/ Sri Lanka
- Dr. Tanuja Thurairajah (Feminist Geographer and Human Rights Enthusiast/Sri Lanka, Switzerland)
- Uma Shanika (Feminist Activist/Germany)
- Uma Makheswari K (Tamil Professor/Pollachi, India)
- Usha P.E (Feminist Activist/Trivandrum/Kerala, India)
- Utpala (Activist/Allahabad, India)
- Vanaja Kanthiah (Feminist Activist/ Paris, France)
- Vasuki (Social Activist/Toronto, Canada)
- Vigy Nalliah (Feminist Activist/France)
- Viji Murugaiyah (Community Organiser/Toronto, Canada)
- Vinta Nanda (Filmmaker, Writer and Editor of The Daily Eye/Mumbai, India)zs
- Vinothini Balasubramaniam (Journalist, Social Activist/Colombo, Sri Lanka)
- Vijayalakshmi T (Professor, Writer and Activist/Kerala, India)
- Vithursha Kamaleswaran (Feminist Activist, Sri Lanka)
- Yalini (Writer/Canada)
கடும் மன உளைச்சலை தருகிறது ..... அவரின் இத்தகைய குற்றங்கள் .
ReplyDeleteநெருங்கிய வட்டத்தில் நிறைய கேள்வி படுகிறேன்... Some of my known friends had helped his victims... பெரியாரியம் தொடங்கி காசி கஞ்சா சாமியார்களோடு ஷிவோ ஹம் மில் நிற்கிறது அவரது பயணம். Predators don't need Alcohol and Ganja to prey on women...but if it they are alcoholics and addicts then the harm is doubled and tripled...The literature addicts too shouldn't go to any extent...they shouldn't shamelessly support a predator for their kicks and benefits they gain from literature...I condemn and i join with the protest...
ReplyDeleteமிகுந்த சங்கடமாக உள்ளது.
ReplyDelete