Posts

மு.மயூரனால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்களும் பொறுப்புக்கூறலும்

Image
மெளனத்தின் நிழலில் நடக்கும் பாலியல் வன்முறையாளர்கள்:  மு.மயூரனால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்களும் பொறுப்புக்கூறலும் அண்மையில் மதூர் சத்யாவின் பாலியல் சுரண்டல்களும், பெண்களின் காணொளிகளைப் பகிர்ந்தமையும், அவற்றை வைத்துப் பெண்களை மிரட்டியமையும் தொடர்பில் இந்தியாவின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதூர் சத்யா கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இது கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரியான செயற்பாடாக பலராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மதூர் சத்யா கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்தக் கைது பெண்களைப் பாலியல் சுரண்டல்களுக்குட்படுத்தியமை தொடர்பில் அல்லாமல், குறிப்பாக பெண்களின் காணொளிகளை வைத்து அவர்களை மிரட்டிய குற்றத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சிக்கு, கட்சியின் உறுப்பினரான மு.மயூரனினால் பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கட்சிய...

பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை

Image
  பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை கடந்த  7 ம் திகதி ( 07 / 02 / 2026)  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் ஏற்பாட்டில் , ‘ Counting and Cracking’  எனும் நாடகத்தின் எழுத்தாளர்  S.  ஷக்திதரன் மற்றும் நடிகர் குழுவுடனான உரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் மேடையில் ,  பொய்களின் அடிப்படையில் காதல் மற்றும் உறவு என்ற பெயரில் பல பெண்களையும் ,  திருநங்கை ஒருவரையும் பாலியல் சுரண்டல்செய்த ஷோபாசக்தியும் இருந்த படமொன்று ஷோபாசக்தியினால் அவரது முகநூலில் பகிரப்பட்டிருந்தது.     கடந்த வருடம் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணிலைவாதிகள் ,  செயற்பாட்டாளர்கள் ,  சினிமா மற்றும் இலக்கியத்துறையைச் சார்ந்த பெண்களும் ,  குயர் சமூகத்தினரும் கையொப்பமிட்டு பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அவரது பாலியல் சுரண்டல் பாங்குகளை அம்பலப்படுத்தி ஒரு  அறிக்கையினை  வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் ஏனை...

ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் தொடர்பான அறிக்கைக்கெதிரான அவரின் மறுப்பு தொடர்பில்: பொய்களைக் கட்டுடைத்தல்

Image
பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுவோர் திட்டமிட்டவகையிலேயே பெண்களை தமது பாலியல் வேட்டைக்குப் பயன்படுத்துகின்றார்கள். இது வெறுமனே தனியொருவரினால் மேற்கொள்ளப்படும் எழுந்தமானமான செயற்பாடல்ல. இது பெண்களுக்கெதிரான கட்டமைப்புரீதியான வன்முறையின் பிரதிபலிப்பும் அதன் தொடர்ச்சியாகவும் இருந்துவருகின்றது. அந்தவகையில் பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களைச் சாத்தியப்படுத்தும் சூழலை உருவாக்குபவர்கள், பாலியல் சுரண்டலில் ஈடுபடுவோர், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களுக்கான பொதுமக்கள் கவனத்தினையும் செவிமடுத்தலையும் பல்வேறுபட்ட கட்டுக்கதைகள் மூலமாகவும் அப்பட்டமான பொய்களினடிப்படையிலும் இல்லாமற்செய்வோர், பாலியற் சுரண்டலில் ஈடுபட்டுவருபவர் தொடர்பில் அனுதாபத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோர், அவருக்கான தளங்களை ஏற்படுத்திக்கொடுத்து அவரைத் தொடர்ந்து சாதாரணமயப்படுத்துவோர், இவ்வாறாக பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல் என்பது ஒரு சமூகக்கூட்டு வன்முறையாக, ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள்மீது இழைக்கப்படும் கட்டமைப்புரீதியான வன்முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. அந்தவகையில் இக்கட்டமைப்புரீதியான வன்முறைச் சுழற்சியினை உடைத்து, ப...